பதிவு செய்த நாள்
25 ஜன2014
01:53
மும்பை:கடந்த டிசம்பர் மாதத்தில், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து, அன்னிய செலாவணியில் பங்குகளாக மாறத்தக்க கடன் பத்திரங்கள் மற்றும் இதர கடன்கள் வாயிலாக, 456 கோடி டாலரை திரட்டிக் கொண்டுள்ளன.இது, முந்தைய நவம்பர் மாதத்தில், 219 கோடி டாலராக இருந்தது என, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற டிசம்பர் மாதத்தில், மேற்கண்ட வகையில், 68 நிறுவனங்கள், கடன் திரட்டி கொண்டுள்ளன. இதில், 54 நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியில்லாமல், கடன்பெறும் திட்டத்தின் கீழ், 56.07 கோடி டாலரை திரட்டிக் கொண்டன.14 நிறுவனங்கள், முன் அனுமதியுடன், கடன்பெறும் திட்டத்தின் கீழ், 401 கோடி டாலரை திரட்டி கொண்டுள்ளன. மேற்கண்ட நிறுவனங்களுள், ஓ.என்.ஜி.சி., விதேஷ் நிறுவனம், வெளிநாடுகளில், கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக, 150 கோடி டாலரையும், ஆயில் இந்தியா நிறுவனம், இருவேறு திட்டங்களின் கைய
இவை தவிர, இந்தியன் ஆயில் (50 கோடி டாலர்), எஸ்ஸார் ஆயில் (15 கோடி டாலர்), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (10 கோடி டாலர்), ஏர் இந்தியா (9.5 கோடி டாலர்) போன்ற நிறுவனங்களும், வெளிநாட்டு வர்த்தக கடன் வாயிலாக நிதி ஆதாரத்தை திரட்டிக் கொண்டுள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|