பதிவு செய்த நாள்
27 ஜன2014
09:35
மும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று (ஜனவரி 27) இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான சரிவுடன் துவங்கி உள்ளன. காலை நேர வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 20,839.52 புள்ளிகளாகவும், நிப்டி 86.15 புள்ளிகள் சரிந்து 6,180.60 புள்ளிகளாகவும் உள்ளன. சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்துள்ளன. இந்த வாரம் ரிசர்வ் வங்கி தனது புதிய பணக் கொள்கையை வெளியிட உள்ளதால், அது பங்குச் சந்தையில் நல்லதொரு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் அதற்கு மாறாக சந்தைகள் சரிவை சந்தித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆசிய பங்குச் சந்தைகளும் இன்று கடுமையான சரிவை சந்தித்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|