தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு ... ஏறி இறங்கும் தங்கம் விலை ஏறி இறங்கும் தங்கம் விலை ...
தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடு மறு ஆய்வு செய்யப்படும்: சிதம்பரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2014
14:33

புதுடில்லி : தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடு மார்ச் மாத இறுதிக்குள் மறுஆய்வு செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறை சரி செய்யப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

மத்திய அமைச்சர் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : தங்கம் இறமதிக்கான கட்டுப்பாடு மார்ச் மாத இறுதிக்குள் மறுஆய்வு செய்யப்படும்; நடப்பு ஆண்டில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறை சரி செய்யப்படும்; சமீப காலமாக தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது; ஆனால் தங்கம் இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகள் விதிப்பது அவசியம்; இத்தகைய கட்டுப்பாடுகள் தங்கம் இறக்குமதியை குறைக்கும்; ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தங்கம் இறக்குமதி 300 டன்னை கடந்துள்ளது; அவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்காவிட்டால் நிலுவைத் தொகை அல்லது நடப்பு நிதி பற்றாக்குறையை சரி செய்ய முடியாது. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தங்கம் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்ததை அடுத்து 2013ம் ஆண்டில் தங்கத்திற்கான சுங்க வரியை மத்திய அரசு 3 முறை உயர்த்தியது. தற்போது இது 10 சதவீதத்தை எட்டி உள்ளது. அதேசமயம் ரிசர்வ் வங்கியும் தங்கம் இறக்குமதியில் தலையிட்டு ரூபாயின் மதிப்பு அடிப்படையில் தங்கம் ஏற்றுமதிக்கான ஆவண மதிப்பை நிர்ணயித்தது. மே மாதத்தில் தங்கம் இறக்குமதி 162 டன்னாக இருந்தது. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் இது நவம்பர் மாதத்தில் 19.3 டன்னாக குறைந்தது. கச்சா எண்ணைக்கு அடுத்தபடியாக அதிகம் இறக்குமதி செய்யப்படும் பொருள் தங்கம் ஆகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)