பதிவு செய்த நாள்
27 ஜன2014
14:33
புதுடில்லி : தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடு மார்ச் மாத இறுதிக்குள் மறுஆய்வு செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறை சரி செய்யப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
மத்திய அமைச்சர் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : தங்கம் இறமதிக்கான கட்டுப்பாடு மார்ச் மாத இறுதிக்குள் மறுஆய்வு செய்யப்படும்; நடப்பு ஆண்டில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறை சரி செய்யப்படும்; சமீப காலமாக தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது; ஆனால் தங்கம் இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகள் விதிப்பது அவசியம்; இத்தகைய கட்டுப்பாடுகள் தங்கம் இறக்குமதியை குறைக்கும்; ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தங்கம் இறக்குமதி 300 டன்னை கடந்துள்ளது; அவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்காவிட்டால் நிலுவைத் தொகை அல்லது நடப்பு நிதி பற்றாக்குறையை சரி செய்ய முடியாது. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தங்கம் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்ததை அடுத்து 2013ம் ஆண்டில் தங்கத்திற்கான சுங்க வரியை மத்திய அரசு 3 முறை உயர்த்தியது. தற்போது இது 10 சதவீதத்தை எட்டி உள்ளது. அதேசமயம் ரிசர்வ் வங்கியும் தங்கம் இறக்குமதியில் தலையிட்டு ரூபாயின் மதிப்பு அடிப்படையில் தங்கம் ஏற்றுமதிக்கான ஆவண மதிப்பை நிர்ணயித்தது. மே மாதத்தில் தங்கம் இறக்குமதி 162 டன்னாக இருந்தது. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் இது நவம்பர் மாதத்தில் 19.3 டன்னாக குறைந்தது. கச்சா எண்ணைக்கு அடுத்தபடியாக அதிகம் இறக்குமதி செய்யப்படும் பொருள் தங்கம் ஆகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|