பதிவு செய்த நாள்
27 ஜன2014
16:16
மும்பை : அமெரிக்கா, ஐரோப்பா சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று கடுமையான சரிவை சந்தித்தன. இந்திய பங்குச் சந்தைகள் இன்று நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டன. காலையில் 315 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ் பிற்பகலில் மேலும் சரிந்து 21,000 புள்ளிகளுக்கும் கீழ் சென்றது. வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 426 புள்ளிகள் சரிந்து 20,707 புள்ளிகளாக இருந்தது. நிப்டி 131 புள்ளிகள் சரிந்து 6136 புள்ளிகளாக இருந்தது.
2013ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதிக்கு பின் சென்செக்ஸ் தற்போது தான் 20 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது. ஆசிய பங்குச் சந்தைகளும் இன்று நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டன. வங்கித்துறை, உலோகம், மின்உற்பத்தி துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. ஐசிஐசிஐ வங்கி, ஹச்.டி.எப்.சி., வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகளும் சரிந்தே காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|