தங்கம் விலை ரூ.56 உயர்ந்ததுதங்கம் விலை ரூ.56 உயர்ந்தது ... இன்டெர்நெட் பயன்படுத்துவோர் 243 மில்லியன் இன்டெர்நெட் பயன்படுத்துவோர் 243 மில்லியன் ...
5 கிலோ காஸ் சிலிண்டர் விற்பனை 'டல்' - பொது மக்களிடம் வரவேற்பு இல்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2014
12:52

ஐந்து கிலோ சமையல் காஸ் சிலிண்டருக்கு பொது மக்களிடம், வரவேற்பு இல்லை. இதனால், திட்டம் முடங்கி போயுள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோக சிலிண்டர், 14.2 கிலோ; வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர், 19 கிலோ என, இரண்டு வகை, சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. ஐ.டி., ஊழியர், கல்லூரி மாணவர்கள், இடம் பெயர்ந்த தொழிலாளிகள், விடுதியில் தங்கியுள்ள பெண்கள் உள்ளிட்டோர், புதிதாக சமையல் காஸ் இணைப்பு பெறுவது கடினமாக உள்ளது. இவர்களின் வசதிக்காக, குறைந்த எடை கொண்ட, காஸ் சிலிண்டரை விற்பனை செய்ய, மத்திய அரசு முடிவு செய்தது.

கடந்த அக்டோபரில், சென்னை, டில்லி, கோல்கட்டா, மும்பை, பெங்களூரு நகரங்களில், 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சென்னையில், அடையாறு, அண்ணா நகர், மாதவரத்தில் உள்ள, ஐ.ஓ.சி., பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களின், பெட்ரோல் விற்பனை மையங்களில், இதன் விற்பனை துவங்கியது. அரசால் வழங்கப்பட்ட, ஏதேனும் ஒரு அடையாள சான்றை சமர்ப்பித்து, 2,140 ரூபாய் கட்டணம் செலுத்தி, சிலிண்டர் வாங்கி கொள்ளலாம். சிலிண்டருடன், ரெகுலேட்டர், ரப்பர் குழாய் வழங்கப்படும். ஒவ்வொரு முறையும், சிலிண்டரில் காஸ் நிரப்ப, 504 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இத்திட்டம் துவங்கியது முதல், தற்போது வரை, மூன்று நிறுவனங்களையும் சேர்த்து, 440 சிலிண்டர்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. பொதுமக்களிடம், இத்திட்டத்திற்கு, வரவேற்பு இல்லை.

இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, 'ஒரு மாதத்திற்கு, 600 சிலிண்டர்கள் விற்பனை செய்ய திட்டமிட்டோம். ஆனால், இதுவரை, 440 சிலிண்டர்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. சென்னையில், கூடுதலாக, 15 இடங்களில், சிலிண்டர்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

- நமது நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)