இன்டெர்நெட் பயன்படுத்துவோர் 243 மில்லியன் இன்டெர்நெட் பயன்படுத்துவோர் 243 மில்லியன் ... மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது -ஆதார் அட்டையும் அவசியமில்லை மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது -ஆதார் அட்டையும் ... ...
தமிழக அரசின் அலட்சியத்தால் கர்நாடகம் செல்கிறது ரூ.70 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2014
14:45

விழுப்பரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில், கயிறு தொழில் பூங்கா அமைக்க, தமிழக அரசு ஒத்துழைக்காததால், அதற்கு ஒதுக்கப்பட்ட, 70 கோடி ரூபாயை, கர்நாடக மாநிலத்துக்கு ஒதுக்க, கயிறு வாரியம் முடிவு செய்துள்ளது.'இதற்கான ஒப்புதல், கொச்சியில் பிப்., 11ம் தேதி நடக்கும், கயிறு வாரியத்தின் துணை குழு கூட்டத்தில் அளிக்கப்படும்' என, வாரியத்தின் துணைத் தலைவர் ராயர் கூறியுள்ளார்.

நடுத்தர தொழில்கள்: மத்திய அரசின், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் கீழ், மத்திய கயிறு வாரியம் இயங்குகிறது. 2013 - 14ல், நாட்டின் பல பகுதிகளில், கயிறு வாரியத்தின் கீழ், தொழில் பூங்கா அமைக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்துக்கு முதல் கட்டமாக, 500 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்தின், விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில், 200 ஏக்கரில், கயிறு பூங்கா அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கு, மத்திய கயிறு வாரியம், 70 கோடி; தமிழக அரசு, 10 கோடி; கதர், கிராம சர்வோதய சங்கம், 20 கோடி ரூபாய் அளிக்க வேண்டும். அதன்படி, மத்திய அரசின், 70 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது.

ஆனால், 'வழுதரெட்டி கிராமத்தில் நிலம் ஒதுக்கவும், மாநில அரசின் பங்குத் தொகையான, 10 கோடி ரூபாய் அளிக்கவும், தமிழக அரசு முன்வரவில்லை. இது குறித்து, தமிழக ஊரக தொழில் துறை அமைச்சரை சந்திக்க, பலமுறை முயன்றும், அனுமதி கிடைக்கவில்லை' என, கயிறு வாரிய துணைத் தலைவர் ராயர் குற்றம் சாட்டினார்.ராயரின் குற்றச்சாட்டுக்கு, தமிழக அரசு, இதுவரை பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதியை, கர்நாடகாவுக்கு ஒதுக்க, கயிறு வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, ராயர் நேற்று கூறியதாவது:

பலனில்லை: மத்திய அரசு ஒதுக்கிய நிதியை, செலவிடாமல் நீண்ட நாளைக்கு நிறுத்தி வைக்க முடியாது. மேலும், லோக்சபா தேர்தல் தேதி அறிவித்து விட்டால், புதிய திட்டங்களை துவங்க முடியாது.எனவே, கயிறு வாரியத்துக்கு ஒதுக்கிய நிதியை, அறிவித்த திட்டங்களுக்கு செலவிட்டு வருகிறோம். தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதியை செலவிட முடியவில்லை. இதுகுறித்து, தமிழக அமைச்சரை சந்திக்க, நேற்று வரை முயற்சித்தும் பலனில்லை. பிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் பிற துறை அதிகாரிகளைக் கூட ஓரிரு நாளில் சந்திக்க முடிகிறது.

தொழில் பூங்கா: தமிழக அமைச்சரை, மூன்று மாதங்களாகியும் சந்திக்க முடியவில்லை. விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில், கயிறு தொழில் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட பணத்தை, கர்நாடக மாநிலம், கோலார் பகுதியில், தொழில் பூங்கா அமைக்க முதலீடு செய்ய முடிவு செய்துள்ளோம். மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை இணை செயலர் இதற்கான ஆய்வுகளை முடித்துள்ளார். கயிறு வாரியத்தின் துணைக் குழுக் கூட்டம், கொச்சியில், பிப்., 11ம் தேதி நடக்கிறது. இக்கூட்டத்தில், கோலாரில் கயிறு பூங்கா அமைக்கவும், தமிழகத்துக்கு ஒதுக்கி, செலவிட முடியாமல் உள்ள நிதியை, கோலார் கயிறு பூங்கா அமைக்க செலவிடவும் அனுமதி அளிக்கப்படும்.இவ்வாறு, ராயர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)