பதிவு செய்த நாள்
30 ஜன2014
17:06
மும்பை : அமெரிக்க பெடரல் வங்கி, கடன்பத்திரங்கள் வெளியீட்டின் மூலம் திரட்டும் நிதியை மேலும் 10 பில்லியன் டாலர் குறைப்பதாக அறிவித்ததன் எதிரொலியாக இந்தியா உள்ளிட்ட ஆசிய பங்குசந்தைகள் சரிந்தன. ஏற்கனவே கடந்த நான்கு நாட்கள் சரிவை சந்தித்த இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும்(ஜனவரி 30ம் தேதி) சரிவில் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 149.05 புள்ளிகள் சரிந்து 20,498.25-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 46.55 புள்ளிகள் சரிந்து 6,073.70-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, எஸ்பிஐ., ஸ்டெர்லைட், ரிலையன்ஸ், ஹிண்டால்கோ, ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட 19 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 11 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் காணப்பட்டன.
இதனிடையே அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பு எதிரொலியால் இந்திய முதலீட்டாளர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்றும், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இதை எதிர்கொள்ள தேவையான் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|