பதிவு செய்த நாள்
31 ஜன2014
00:21
சென்னை:தமிழகத்தில், கடந்த ஆண்டு, எதிர்பார்த்த அளவு, மழை இல்லாததால், பாசிப்பயிறு விளைச்சலில், கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், தமிழகத்திற்கு, பருப்புகளை,
மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களும், கர்நாடகா, ஆந்திரா
உள்ளிட்ட தென் மாநிலங்களும், வழங்கி வந்தன.
இந்த மாநிலங்களில், நடப்பாண்டு, அறுவடையில் தாமதம் ஏற்பட்டுள்ளதால்,
தமிழகத்துக்கான, பருப்பு வகைகளின் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதையறிந்து, பெரிய வியாபாரிகள், அதிக அளவில், பாசிப்பயிறு மற்றும் பாசி பருப்பை, பதுக்க
துவங்கியுள்ளனர்.
தமிழகத்தின் பெரிய மார்க்கெட்டுகளான, சென்னை, சேலம், விருதுநகர் ஆகிய இடங்களில், பயிறு, பாசிப்பருப்புக்கு, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; இதனால், அவற்றின் விலை, உயர்ந்தது.கடந்த வாரம், பாசி பருப்பு, மொத்த விலையில், முதல் ரகம், குவிண்டால், 8,800 ரூபாயில் இருந்து, 10,300 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், குவிண்டால், 8,500 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாகவும், பாசிப்பயிறு, குவிண்டால், 8,200ல் இருந்து, 9,800
ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
நேற்று, பாசிப்பருப்பு விலை, குவிண்டாலுக்கு, 600 ரூபாய் வரை மேலும் உயர்ந்துள்ளது. முதல் ரகம் குவிண்டால், 10,900 ரூபாய்க்கும், 2ம் ரகம் குவிண்டால், 10,600 ரூபாயாகவும், பாசிப்பயிறு குவிண்டால், 10,200 ரூபாயாக உயர்ந்துள்ளது.சில்லரை விலையில், கிலோ, முதல் ரகம், 114 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 110 ரூபாய்க்கும், பாசிப்பயிறு, கிலோ, 104 ரூபாய்க்கு விற்கிறது. பாசிப்பருப்பின் விலை, ஒரே வாரத்தில், குவிண்டாலுக்கு, 2,100 ரூபாய் வரையிலும், கிலோவுக்கு, 25 ரூபாய் வரையிலும், விலை உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|