பதிவு செய்த நாள்
31 ஜன2014
15:21
புதுடில்லி: "தொலைபேசியில், தேவையற்ற வர்த்தக அழைப்புகளை மேற்கொள்வதால், துண்டிக்கப்படும் இணைப்பை, 500 ரூபாய் செலுத்தி, திரும்ப பெற்றுக் கொள்ளலாம்' என, தொலை தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான, "டிராய்' அறிவித்து உள்ளது.
"வாடிக்கையாளர்களுக்கு தொல்லை தரும், வர்த்தக அழைப்புகளின் இணைப்புகள் துண்டிக்கப்படும்' என, கடந்த, ஆகஸ்ட் மாதம், டிராய் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இத்தகைய டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு, வழங்கும் நிவாரணமாக, துண்டிக்கப்பட்ட இணைப்புகளை, 500 ரூபாய் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம் என, டிராய் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம், 500 ரூபாய் அபராதம் செலுத்தி, மீண்டும் இணைப்பை பெறும் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனங்கள், தங்கள் இஷ்டம் போல், யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், போன் செய்து, தொல்லை தரும் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|