பதிவு செய்த நாள்
31 ஜன2014
17:46
மும்பை : கடந்த ஐந்து நாட்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று(ஜனவரி 31ம் தேதி) சிறிதளவு ஏற்றத்துடன் முடிந்தது. இருப்பினும் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்த ஒருவாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 875 புள்ளிகள் சரிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 15.60 புள்ளிகள் உயர்ந்து 20,513.85-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 15.80 புள்ளிகள் உயர்ந்து 6,089.50-ஆகவும் முடிந்தன.
இந்த ஒருவாரத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை உயர்த்தியது, ரூபாயின் மதிப்பில் ஏற்றம், அமெரிக்க பெடரல் வங்கி கடன்பத்திரம் வெளியிடுவதை குறைத்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் இந்தவாரம் கடும் சரிவை சந்தித்துள்ளன. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், கெயில், ஐசிஐசிஐ., மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டாடா ஸ்டீல், எஸ்பிஐ., விப்ரோ உள்ளிட்ட 18 நிறுவனங்கள் ஏற்றத்திலும், மற்ற 12 நிறுவன பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|