டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு "டிராய்' தாராளம்டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு "டிராய்' தாராளம் ... தங்கம் விலை ரூ.32 அதிகரிப்பு தங்கம் விலை ரூ.32 அதிகரிப்பு ...
இந்திய விமான போக்குவரத்து துறையின் பாதுகாப்பு தரம் குறைப்பு - அமெரிக்கா நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2014
11:34

வாஷிங்டன்: இந்தியா விமான போக்குவரத்து துறையின் பாதுகாப்பு தரத்தை அமெரிக்காவின் விமான போக்குவரத்து ஆணையம் குறைத்துள்ளது. இந்திய விமான போக்குவரத்து துறையின் பாதுகாப்பு இரண்டாம் தரத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க முடியாது என கூறப்படுகிறது.

சர்வதேச விமான போக்குவரத்து ஆணையம் விதித்த விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படாததால் இந்திய விமான போக்குவரத்து துறையின் தரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இந்திய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரம் குறைக்கப்பட்டதால் ஏர் இந்தியா மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள், அமெரிக்காவுக்கு கூடுதலாக விமானங்கள் இயக்க முடியாது. தரம் குறைக்கப்பட்டுள்ளது, இந்திய விமானங்களின் பாதுகாப்பு குறைந்து போயுள்ளது என்ற அர்த்தமல்ல என்றும், பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை இந்திய விமான போக்குவரத்து ஆணையம் சரியாக கண்காணிக்கவில்லை என்பது தான் அர்த்தம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய விமான போக்குவரத்து துறையின் பாதுகாப்பு தரம் குறைக்கப்படாமல் இருக்க, இந்திய விமான போக்குவரத்து ஆணையம் பல நடவடிக்கைகளை விரைந்து எடுத்ததாகவும், இதற்காக அதிக ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் கையாள முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் வளர்ச்சியடைந்து வரும் இந்திய விமான போக்குவரத்து துறையின் சவால்களை எதிர்கொள்ள முடியும் என நம்புகிறது.

இந்திய விமான போக்குவரத்து துறை பற்றி,அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ள 33 பிரச்னைகள் பற்றி அறிக்கை அளித்துள்ளதாக இந்திய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் கூறியுள்ளது.

இந்திய விமான போக்குவரத்து துறை பற்றி கடந்த செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அமெரிக்கா ஆய்வு மேற்கொண்டது. அதில், இந்திய விமான போக்குவரத்து துறை பற்றி தெரிவித்துள்ள பிரச்னைகளை சரிசெய்வதற்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. இதனை சரிசெய்வதற்காக, இந்திய விமான போக்குவரத்து துறை, நேரடியாக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களை தேர்வு செய்து கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இவர்களை தேர்வு செய்ய மத்திய தேர்வாணையத்தை அணுக தேவையில்லை எனவும், தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கவும் அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங், இந்திய விமான போக்குவரத்து துறையின் பாதுகாப்பு தரம் குறைக்கப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது என்றும், இது ஆச்சர்யமாக உள்ளது என்றும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)