தங்கம் விலை ரூ.32 அதிகரிப்புதங்கம் விலை ரூ.32 அதிகரிப்பு ... ரோஜா ஏற்றுமதி அதிகரிப்பு ரோஜா ஏற்றுமதி அதிகரிப்பு ...
ரப்பர் விலை வீழ்ச்சியால் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2014
14:20

புதுடில்லி: இயற்கை ரப்பர் விலை வீழ்ச்சியால், விவசாயிகளுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில், கேரளாவின் பங்களிப்பு, 90 சதவீதமாக உள்ளதால், அம்மாநில விவசாயிகள் மேற்கண்ட இழப்பை சந்தித்துள்ளனர்.

கடந்த, 2011ம் ஆண்டு ஒரு கிலோ, 'ஆர்.எஸ்.எஸ்4' ரகம் இயற்கை ரப்பர் விலை, 248 ரூபாயாக இருந்தது. இது, 2012ம் ஆண்டு, 200 ரூபாயாகவும், சென்ற ஆண்டு, 150 ரூபாயாகவும் சரிவடைந்தது. நடப்பாண்டு, இந்த விலை, 135 ரூபாயாக மேலும் வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேச அளவில், இயற்கை ரப்பர் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அதன் விலை சரிவடைந்து வருகிறது. இதன் காரணமாக, குறைந்த விலையில் அதிக அளவில் ரப்பர் இறக்குமதியாகிறது.
இதனால், குறிப்பாக, கேரளாவில், ரப்பர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, 50 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், 40 சதவீத குடும்பங்கள், ரப்பர் வாயிலான வருவாயை மட்டுமே சார்ந்துள்ளன.

ரப்பர் விவசாயிகளில், 70.75 சதவீதம் பேர், ஒரு ஹெக்டேருக்கும் குறைவாகவே, ரப்பர் தோட்டம் வைத்துள்ளனர். சென்ற ஆண்டு, ஏப்., நவ., வரை, 2,37,723 டன் இயற்கை ரப்பர் இறக்குமதியானது. இது, 2012ம் ஆண்டு, இதே காலத்தில்,1,55,075 டன்னாக இருந்தது. ரப்பர் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், அதன் மீதான சுங்க வரி, கிலோவுக்கு, 20 ரூபாயில் இருந்து, 30 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இருந்தபோதிலும், ரப்பர் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதால், வரி உயர்வு பயனளிக்கவில்லை என, பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர். இதனிடையே, கேரள அரசு, ரப்பர் விலை சரிவை தடுக்க, வெளிச் சந்தையில் அதனை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய வர்த்தக அமைச்சகத்திடம், 100 கோடி ரூபாய் வழங்குமாறு கோரியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)