பதிவு செய்த நாள்
04 பிப்2014
10:20
மும்பை : சென்செக்ஸ் நேற்று 300 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று(பிப்ரவரி 4ம் தேதி) மேலும் 200 புள்ளிகள் சரிந்து 20 ஆயிரத்திற்கு கீழ் சென்றது. அமெரிக்க பங்குசந்தைகள் சரிந்தது, அதன்காரணமாக இந்தியா உள்ளிட்ட ஆசிய பங்குசந்தைகள் சரிந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் சரிவில் காணப்படுகின்றன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணிநிலவரப்படி) மும்பை சந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 232.88 புள்ளிகள் சரிந்து 20 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்று 19,976.38-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 59.80 புள்ளிகள் சரிந்து 6 ஆயிரத்திற்கு கீழ் சென்று 5,942.00-ஆகவும் இருந்தது.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 2.31 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 2.62 சதவீதமும் சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|