பதிவு செய்த நாள்
04 பிப்2014
12:35
மும்பை: இந்தியாவில், "பிட்காய்ன்' பரிமாற்றம் குறித்த விதிமுறைகளை, வரும் 7ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி வெளியிடாவிட்டால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர, பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இணையத்தில் புழங்கும், "பிட்காய்ன்' கரன்சிக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடையாது என்பதால், அதில் முதலீடு செய்வது ஆபத்தானது என, கடந்த மாதம் ரிசர்வ் வங்கி எச்சரித்தது. மேலும், "பிட்காய்ன்' தொடர்பான விதிமுறைகள், விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தது. இந்த அறிவிப்பால், இந்தியாவில் செயல்பட்டு வந்த "பிட்காய்ன்' நிறுவனங்கள் மூடப்பட்டன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் சார்பில், பெங்களூரை சேர்ந்த, சைதன்யா அசோசியேட்ஸ் என்ற சட்ட ஆலோசனை நிறுவனம், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனிடம் மனு அளித்தது. எனினும், ரிசர்வ் வங்கி இன்னும் விதிமுறைகளை வெளியிடாமல் உள்ளது.
இதனால், "வரும் 7ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி "பிட்காய்ன்' தொடர்பான விதிமுறைகளை வெளியிடா விட்டால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்” என, சைதன்யா நிறுவனத்தின் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், ஒரு சில நிறுவனங்கள், மீண்டும் "பிட்காய்ன்' வர்த்தகத்தை துவக்கியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|