ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வுஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ... தேயிலை உற்பத்தி 9 சதவீதம் அதிகரிப்பு தேயிலை உற்பத்தி 9 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் உயர்வு, நிப்டி சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2014
23:40

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சாதகமற்ற சர்வதேச நிலவரங்கள், ஸ்திரமற்ற அரசியல் தன்மை மற்றும் முதலீட்டாளர்களிடையே காணப்படும் ஆர்வமின்மை போன்றவற்றால், பங்கு வியாபாரம் மந்தமாகவே இருந்தது.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. குறிப்பாக, ‘நிக்கி’ மற்றும் ஹாங்செங்’ குறியீட்டு எண்கள், 600 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி கண்டன என்பது குறிப்பிடத்தக்கது.நேற்றைய வியாபாரத்தில், உலோகம், தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம், மருந்து உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 2.67 புள்ளிகள் உயர்ந்து, 20,211.93 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குசந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,255.52 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,963.12 புள்ளிகள் வரையிலும் சென்றது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பார்தி ஏர்டெல், ஐ.டி.சி., சிப்லா உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், மகிந்திரா, கெயில், டி.சி.எஸ்., உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின்விலை சரிவடைந்தும், டாட்டா பவர் நிறுவன பங்கின் விலை மாற்றமின்றியும் இருந்தன.தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி, 0.90 புள்ளிகள் குறைந்து, 6,000.90 புள்ளிகளில் நிலைகொண்டது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)