ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வுஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ... தேயிலை உற்பத்தி 9 சதவீதம் அதிகரிப்பு தேயிலை உற்பத்தி 9 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தனியார் வங்கிகளின் வசூலாகாத கடன் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2014
23:42

மும்பை:நடப்பு 201314ம் நிதியாண்டில், அக்., டிச., வரையிலான மூன்றாவது காலாண்டில், தனியார் வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்துள்ளது.
அதே சமயம், இதே காலத்தில், இவ்வங்கிகள் லாபம் ஈட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.தனியார் துறையில் முதலிடத்தில் உள்ள, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிகர வசூலாகாத கடன், மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலாண்டில், 0.81 சதவீதம் உயர்ந்து, 3,121 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவ்வங்கி, இதே காலத்தில், 1,776 கோடி ரூபாய் கடன்களை மறுசீரமைத்துள்ளது.
இருந்தபோதிலும், மேலும், 3,000 கோடி ரூபாய் அளவிற்கு, மறுசீரமைப்பதற்கான கடன் உள்ளதால், அது, இவ்வங்கியின் நான்காம் காலாண்டு செயல்பாடுகளை பாதிக்கும் என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மதிப்பீட்டு காலாண்டில், ஆக்சிஸ் வங்கியின் வசூலாகாத கடன், 0.09 சதவீதம் உயர்ந்து, வழங்கப்பட்ட மொத்த கடனில், 1.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதே சமயம், இதே காலத்தில், எச்.டீ.எப்.சி. வங்கியின் வசூலாகாத கடன், 0.10 சதவீதம் குறைந்து, மொத்த கடனில், 1 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இதன் நிகர வருவாயில், நிகர வட்டி வருவாய், 16.4 சதவீதம் உயர்ந்து, 4,635 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. யெஸ் பேங்க், இந்தஸ் இந்த் பேங்க் போன்ற சிறிய வங்கிகளின், நிகர வட்டி வருவாயில் மிகப் பெரிய மாற்றமில்லை என்று தெரிவித்துள்ளன.
பொதுத் துறை வங்கிகளில் தான், வசூலாகாத கடன் அதிகம் உள்ளது. இது, தனியார் வங்கிகளையும் பாதிப்பதாக உள்ளது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)