தக்காளி விலை கிலோ ரூ. 1: கவலையில் விவசாயிகள்தக்காளி விலை கிலோ ரூ. 1: கவலையில் விவசாயிகள் ... ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.57 ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.57 ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நாட்டின் சர்க்கரை உற்பத்தி 1.15 கோடி டன்னாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2014
23:51

புதுடில்லி:நடப்பு பருவத்தில், ஜன., வரையிலான நான்கு மாத காலத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 1.15 கோடி டன்னாக சரிவடைந்து உள்ளது.
இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 1.39 கோடி டன்னாக இருந்தது.ஆக, மதிப்பீட்டு காலத்தில், இதன் உற்பத்தி, 16.6 சதவீதம் சரிவடைந்துள்ளதாக, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.நம் நாட்டில், சர்க்கரை பருவம், அக்., முதல் செப்., வரை கணக்கிடப்படுகிறது.
நாட்டில் சர்க்கரை அதிகளவில் உற்பத்தியாகும், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில், கரும்பு அரவை தாமதமாக துவங்கியதால், சர்க்கரை உற்பத்தி குறைந்து போயுள்ளது.இந்நிலையில், கடந்த 15 மாதங்களில், உள்நாட்டில், சர்க்கரை விலை கிலோவுக்கு, 6 8 ரூபாய் வரை குறைந்துள்ளது. அதேசமயம், கரும்புக்கான விலை, அதிகரித்துள்ளது. இதனால், சர்க்கரை உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளது.
நடப்பு சர்க்கரை பருவத்தின் துவக்கத்தில், சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை, 3,000 கோடி ரூபாயாக இருந்தது. இது, ஜன., மாத இறுதியில், 10 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.உற்பத்தி செலவு அதிகரித்து, சர்க்கரையின் விலை சரிவடைந்துள்ளதால், விவசாயிகளுக்கு, உரிய காலத்தில், கரும்பிற்கான தொகையை அளிக்க முடியவில்லை என, ‘இஸ்மா’ தெரிவித்துள்ளது.
கணக்கீட்டு காலத்தில், மகாராஷ்டிராவில் சர்க்கரை உற்பத்தி, 48.50 லட்சம் டன்னிலிருந்து, 40.75 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இதே போன்று, உத்தரபிரதேச மாநிலத்திலும், இதன் உற்பத்தி, 35.90 லட்சம் டன்னிலிருந்து, 27.60 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.இருப்பினும், நடப்பு பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.50 கோடி டன்னாக இருக்கும் என, ‘இஸ்மா மதிப்பிட்டுள்ளது. கடந்த 2012 13ம் பருவத்தில், இதன் உற்பத்தி, 2.51 கோடி டன்னாக இருந்தது.உலகளவில், சர்க்கரை உற்பத்தியில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதேசமயம், பயன்பாட்டிலும் முன்னணி நாடாக திகழ்கிறது.நடப்பு பருவத்தில், உள்நாட்டில் சர்க்கரை பயன்பாடு, 2.30 கோடி டன்னாக இருக்கும் என, ‘இஸ்மா மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)