பதிவு செய்த நாள்
08 பிப்2014
14:08
சொகுசுகார் சந்தை சிறப்பாக இருப்பதால், இந்தியாவில் வெளி நாட்டு கார்கள் பல மாடல்களில், பல்வேறு விலைப் பட்டியலில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதில், "ஆடி மெர்சிடெஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யூ' போன்றவை, மிகச் சிறப்பான விற்பனை வளர்ச்சியை அடைந்துள்ளது. அதிலும், ஆடி நிறுவனம், ஏ3 செடான் என்ற பயணியர் வசதி காரையும், ஆர்எஸ்7 என்ற ஜீப்வகை காரையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆடியின் ஆர்எஸ்7 மாடல், 4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்டு, 560 பி.எச்.பி., சக்தி கொடுப்பதாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1 கோடி ரூபாய்க்குமேல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆடி க்யூ 3 மாடல் பெரும்பான்மையினர் வாங்கக்கூடிய சொகுசுகாராக கிட்டத்தட்ட, 25லட்ச ரூபாய் விலையில் கிடைக்கிறது.
ஆடி கி3 மாடலை தொடர்ந்து, "க்யூ எஸ்' மாடல் பெரும்பான்மை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகியது. மேலும், ஏ8எல் சலூன் மாடல், இந்த வருடம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஆடி நிறுவனம், மேலும் பல ஜீப் வகைகள் வர உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆண்டிற்கு, 35 ஆயிரம் யூனிட் சொகுசு கார்களுக்கு, இந்தியாவில் விற்பனை தேவை இருப்பதால், ஆடி தங்களின் போன ஆண்டு, 10 ஆயிரம் யூனிட் விற்பனை சாதனையை, இந்த ஆண்டு முறியடித்து சாதனை புரியும் என்றே தெரிகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|