பதிவு செய்த நாள்
08 பிப்2014
16:03
மும்பை: வங்கிகளுக்கு மட்டுமே, ஏ.டி.எம்., அமைக்க வழங்கப்பட்டு வந்த உரிமத்தை, வங்கி சாரா நிறுவனங்களுக்கும், ரிசர்வ் வங்கி விரிவுபடுத்தியுள்ளது. இதன்படி, முத்தூட் பைனான்ஸ், டாட்டா கம்யூனி கேஷன்ஸ் பேமென்ட் சொல்யூஷன்ஸ், பிரிசம் பேமன்ட் சர்வீசஸ், வக்ரங்கி ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு, ஏ.டி.எம்., அமைக்க, ரிசர்வ் வங்கி உரிமம் வழங்கியுள்ளது. இதில், வக்ரங்கி தவிர்த்து, இதர மூன்று நிறுவனங்கள், ஏ.டி.எம்., மையம் சார்ந்த பணிகளை, ஏற்கெனவே துவக்கி விட்டன. வங்கிகளின், ஏ.டி.எம்., மையங்கள் அதிகம் இல்லாத ஊரகப் பகுதிகள் மற்றும் புறநகரங்களிலும் அவ்வசதி பரவலாக்கப்பட வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் நோக்கம். இதை செயல்படுத்தும் விதத்தில், வங்கி சாரா நிறுவனங்களுக்கும், ஏ.டி.எம்., அமைக்கும் உரிமத்தை, ரிசர்வ் வங்கி வழங்கத் துவங்கியுள்ளது. இந்த உரிமம் பெற்ற நிறுவனங்கள், மேற்குறிப்பிட்ட பகுதிகளில், ஓராண்டிற்குள், ஏ.டி.எம்., மையங்களை அமைக்க வேண்டும் என்பது, குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|