பதிவு செய்த நாள்
08 பிப்2014
16:15
புதுடில்லி: தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரியை குறைக்க திட்டமில்லை என, மத்திய நிதி இணை அமைச்சர் ஜே.டீ.சீலம் பார்லிமென்டில் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருவதையடுத்து, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவடைந்ததையடுத்து, மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான சுங்க வரி, கடந்த ஆண்டில் மட்டும், மூன்று முறை உயர்த்தப்பட்டு, 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியும், தங்கம் இறக்குமதி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்நிலையில், தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரியை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை, என்றார். கடந்த, 2012 - 13ம் நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 8,820 கோடி டாலராக மிகவும் அதிகரித்திருந்தது. இதை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்த நடவடிக்கையால், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 5,000 கோடி டாலருக்கும் கீழ் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு மே மாதத்தில், தங்கம்இறக்குமதி, 162 டன்னாக இருந்தது. தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் இதன் இறக்குமதி, 19.3 டன்னாக சரிவடைந்தது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல், டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், தங்கம் இறக்குமதி வரி வாயிலாக, மத்திய அரசுக்கு, 7,590 கோடி ரூபாய் ருவாய் கிடைத்துள்ளது. இது, கடந்த, 2012 - 13ம் நிதியாண்டில், 10,463 கோடி ரூபாயாக இருந்தது.
தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளால், தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்து. இவ்வகையில், மாதம் ஒன்றுக்கு, சராசரியாக, 1 - 3 டன் தங்கம் கடத்தி வரப்படுவதாக தெரியவந்துள்ளது. அண்மையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வரும் மார்ச் இறுதியில், தங்கம் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|