பதிவு செய்த நாள்
10 பிப்2014
08:47
புதுடில்லி : அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்க வங்கித்துறை திட்டமிட்டுள்ளது. நிதித்துறை சேவைகளை கிராம புறங்களுக்கும் விரிவுபடுத்துவதற்காகவும், புதிய உரிமங்களை பெறுவதற்கு உதவி செய்வதற்காகவும் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
அடுத்த சில ஆண்டுகளில் வங்கித்துறை ஊழியர்கள் பலர் ஓய்வு பெற இருப்பதாலும், பொதுத்துறை வங்கிகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்காகவும் வங்கித்துறையில் வேலைவாய்ப்புக்களை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் வங்கித்துறையில் 7 முதல் 10 லட்சம் வரை வேலைவாய்ப்புக்கள் உருவாகும் எனவும், 2014ம் ஆண்டில் அதிக வேலைவாய்ப்பை தரும் துறையாக வங்கித்துறை திகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கித்துறை விரிவாக்கம் மற்றும் புதிய வங்கிகள் உருவாக்குதல் ஆகியவற்றால் அடுத்த 5 ஆண்டுகளில் வங்கித்துறை வேலைவாய்ப்புக்கள் 18 முல் 20 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|