பதிவு செய்த நாள்
11 பிப்2014
16:36
திண்டுக்கல்: ஆவின் பால் உற்பத்தி நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 சதவிகிதம் குறைந்திருப்பதால், பால் தட்டுப்பாடு அபாயத்தை தவிர்க்க, அனைத்து பொது மேலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று சமீபத்தில் கொள்முதல் விலையை தமிழக அரசு லிட்டருக்கு ரூ. 3 அதிகரித்தது. இதைவிட அதிகமாக லிட்டருக்கு ரூ. 6 வீதம், தனியார் நிறுவனங்கள் வழங்குவதால், பெரும்பாலான உற்பத்தியாளர்கள் அவர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஆவின் பால் உற்பத்தி, மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 24 லட்சம் லிட்டரில் இருந்து தற்போது 20 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. கோடையில், மேலும் குறைவதற்கான வாய்ப்புள்ளதால், தட்டுப்பாடை தவிர்ப்பதற்காக ஆவின் பொதுமேலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஆவின் அதிகாரிகள் கூறுகையில்,"பால் உற்பத்தியில் கர்நாடகா, பின் தங்கிய மாநிலமாக இருந்தது. இதையடுத்து, அங்குள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் மறுசீரமைக்கப்பட்டு, தேவைகளை நிறைவேற்றவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது கர்நாடகா, பால் உற்பத்தியில் முதன்மை மாநிலமாக மாறியுள்ளது. அதே போன்ற சீரமைப்பினை தமிழகத்திலும் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், பால் உற்பத்தியை தக்கவைத்துக்கொள்ள முடியும்,” என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|