தங்கம் கையிருப்பில் அமெரிக்கா முதலிடம்தங்கம் கையிருப்பில் அமெரிக்கா முதலிடம் ... 'ஸ்மார்ட் போன்' விற்பனை 28.20 கோடியை தாண்டியது 'ஸ்மார்ட் போன்' விற்பனை 28.20 கோடியை தாண்டியது ...
'டெபிட் கார்டு' வாயிலாக பொருட்கள் வாங்குவது அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2014
15:57

சென்னை: டெபிட் கார்டு' எனப்படும் ரொக்க அட்டை வாயிலாக பொருட்கள் வாங்குவது, டிக்கெட் முன்பதிவு செய்வது மற்றும் பல்வேறு சேவைகளை பெறும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வங்கிகள் வழங்கும்,'டெபிட் கார்டு'ஐ, வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.,மில் பணம் எடுப்பதற்கு மட்டுமே அதிகம் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது, 'டெபிட் கார்டு' வாயிலாக ஏ.டி.எம்.,மில் பணம் எடுப்பது மட்டுமின்றி, சில்லரை விற்பனை நிலையங்களில், பொருட்களை வாங்குவதற்கும் இதை அதிகளவில் பயன்படுத்த துவங்கி உள்ளனர். தற்போது, 'டெபிட் கார்டு'களில் பல்வேறு பாதுகாப்பு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு அக்டோபர் வரையிலான காலத்தில், 'டெபிட் கார்டு' வாயிலாக மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், கடந்தாண்டின் இதே காலத்தை விட, 38 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேசமயம், கணக்கீட்டு காலத்தில், 'கிரெடிட் கார்டு' எனப்படும் கடன் அட்டை வாயிலான வர்த்தகம், 22 சதவீதம் என்ற அளவில் தான் வளர்ச்சி கண்டிருந்தது.கடந்தாண்டு அக்டோபர் இறுதி நிலவரப்படி, உள்நாட்டில், 37.42 கோடி, 'டெபிட் கார்டு' வாயிலாக, 5.49 கோடி வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் வர்த்தக மதிப்பு, 8,686 கோடி ரூபாயாகும் என, ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் நிலவரப்படி, உள்நாட்டில், 30.68 கோடி, 'டெபிட் கார்டு'கள் புழக்கத்தில் இருந்தன. இவற்றின் வாயிலாக, அவ்வாண்டில், 6,779 கோடி ரூபாய் மதிப்பிலான, 3.99 கோடி வர்த்தக பரிவர்த்தனைகள் நடைபெற்றன.கடந்தாண்டு அக்டோபர் வரையிலுமாக, 'டெபிட் கார்டு' வாயிலாக, ஏ.டி.எம்.,களில், 55.16 கோடி பரிவர்த்தனை மூலம், 1.71 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பணம் எடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில், 'டெபிட் கார்டு' வாயிலாக, பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கான விழிப்புணர்வு நல்ல அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. நிறுவனங்களும், 'டெபிட் கார்டு' மூலம், பொருட்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு சிறப்பு சலுகை திட்டங்களை அறிவித்து வருவதாக, வங்கி துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)