பதிவு செய்த நாள்
17 பிப்2014
10:30
மும்பை : பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பால் வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியுள்ளன. பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யவுள்ளது. இன்றைய பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இருக்கப்போவது கிடையாது இருந்தாலும் அதன்மீதான எதிர்பார்ப்பில் பங்குசந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணிநிலவரம்) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 102.92 புள்ளிகள் உயர்ந்து 20,469.74-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 23.60 புள்ளிகள் உயர்ந்து 6,071.95-ஆகவும் இருந்தன.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 0.40 சதவீதமும், ஹாங்காங்கின், ஹேங்சேங் 0.79 சதவீதமும் உயர்ந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|