பதிவு செய்த நாள்
17 பிப்2014
17:37
புதுடில்லி: உலகப்பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் என்றும் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். பார்லிமென்ட்டில் இடைக்கால பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பட்ஜெட் குறித்து விளக்கினார். அவர் பேசியதாவது: இந்தியா பொருளாதார சரிவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நாட்டில் ஒட்டுமொத்த நிதிப்பற்றாக்குறை, பணவீக்கம் ஆகியவை குறைந்துள்ளது.
பொருளாதரத்துக்கு முன்னேற்றத்துக்கு வலிமையான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி நாளுக்குநாள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பத்தாண்டு கால ஆட்சியில், பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. 2004-09 ஆண்டில் வளர்ச்சி 8.4 சதவீகமாகவும், 2009-14 ஆண்டில் வளர்ச்சி 6.6 சதவீகமாகவும் உள்ளது. நாட்டில் வளர்ச்சியும், பொருளாதார ஸ்திரத்தன்மையும் ஏற்பட்டுள்ளது.
நடப்பாண்டில் நாட்டின் வளர்ச்சி 5 சதவீதத்தை எட்டும், அது படிப்படியாக உயர்ந்து 2014-15-ல் நாட்டின் வளர்ச்சி 6 சதவீதத்தை எட்டும். இன்னும் 30 ஆண்டுகளில் உலகப்பொருளாதாரத்தில், இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறும்.
பொது நிறுவன வங்கிகளின் முதலீடு அதிகரிக்கப்பட்டதால், கார்ப்ரேட் நிறுவனங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. வாகனங்களுக்கு உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. சமூக முன்னேற்றத்துக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால் ரூ.300 கோடி முதல் 400 கோடி வருவாயில் நஷ்டம் ஏற்படும். எஸ்.யு.யு.டி.ஐ.யின் பங்குகளை ஆக்சிஸ் வங்கி வாங்கும் பணி மார்ச் 31ம் தேதிக்குள் முடிவடையும், தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|