பதிவு செய்த நாள்
18 பிப்2014
16:50
மும்பை : பட்ஜெட் அறிவிப்பால் இந்திய பங்குசந்தைகள் நேற்று உயர்வுடன் முடிந்தன, அது இன்றும் தொடர்கிறது. காலையில் இந்திய பங்குசந்தைகள் சற்று சரிவுடன் துவங்கின இருப்பினும் வங்கி, ஆட்டோ மற்றும் முதலீட்டு தொடர்பான பங்குகள் விலை உயர்ந்ததாலும், அதுதொடர்பான பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு வாங்கியதாலும் இந்திய பங்குசந்தைகள் கடந்த 3 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்வுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 170.15 புள்ளிகள் உயர்ந்து 20,634.21-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 53.80 புள்ளிகள் உயர்ந்து 6,127.10-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஆக்சிஸ், எச்டிஎப்சி., ஐசிஐசிஐ., மாருதி சுசூகி உள்ளிட்ட 21 நிறுவன பங்குகள் விலை ஏற்றத்தில் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|