16 அன்னிய நிறுவனங்கள் முதலீடு - தமிழகத்தில் ரூ.5,000 கோடிக்கு ஒப்பந்தம்16 அன்னிய நிறுவனங்கள் முதலீடு - தமிழகத்தில் ரூ.5,000 கோடிக்கு ஒப்பந்தம் ... தங்கம் பயன்பாட்டில் இந்தியாவை விஞ்சியது சீனா தங்கம் பயன்பாட்டில் இந்தியாவை விஞ்சியது சீனா ...
பொருளாதார மந்த நிலையிலும் நாட்டில் வளர்ச்சி: சொல்கிறார் நிதியமைச்சர் சிதம்பரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2014
11:51

புதுடில்லி: ''கடுமையான பொருளாதார மந்த நிலை, சிக்கலான சூழ்நிலைகள் இருந்த போதிலும், நாட்டின் பொருளாதாரத்தை, வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்துள்ளோம்,'' என, மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கட்டுக்கடங்காமல் : பொருளாதாரத்தை, மேலும் வலுவடையச் செய்யும் வகையில்தான், தற்போதும், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நம் நாட்டை பொறுத்தவரை நிதிப் பற்றாக்குறை அதிகரித்து வந்ததுடன், பணவீக்கமும் கட்டுக்கடங்காமல் போனது. இந்நிலையிலும், பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்திடும் வகையில், தற்காலிக அடிப்படையில், குறைந்த அளவில் சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த, ஐந்து மாதங்களாக, தயாரிப்பு, பொறியியல், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, கடும் பின்னடைவை கண்டுள்ளன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான், சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

மத்தியில், 'ரிலையன்ஸ்' அம்பானி தான் ஆட்சி செய்கிறார் என, மேம்போக்காக கூறப்படும் கருத்துக்கள், பதில் அளிக்க தகுதியானவை அல்ல. உலகின் பல்வேறு நாடுகளும், சர்வதேச பொருளாதார சுணக்க நிலையில் சிக்கியிருந்தன. அந்நாடுகளும், பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. கடந்த, 2012 - 13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டிலும், வரும், 2014 - 15ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டிலும், நாட்டின் பொருளாதாரத்தை நிலை நிறுத்திடும் வகையில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மானியங்களுக்காக அதிகளவில் செலவிடுவதாக, ஒரு சிலர் குற்றம் சாட்டுகின்றனர். மக்களால், தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆட்சி புரியும் போது, மக்களின் கோரிக்கைகளுக்கு, செவி சாய்க்காமல் இருக்க முடியாது.

அதிகரிக்க வேண்டும் : குறிப்பாக, பெரும்பான்மையான மக்கள், உணவு பொருட்கள் மற்றும் மண்ணெண்ணெயின் விலை, குறைவாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். மானிய விலையில் வழங்கப்படும், சமையல் எரிவாயு உருளையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, மக்கள் மத்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்தே, காங்கிரசின் துணைத் தலைவர் ராகுல், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தினார். மேலும், பார்லிமென்ட் உறுப்பினர்களும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தி வந்தனர். எந்த ஒரு அரசும், சொர்க்கத்திலிருந்து வந்து விடவில்லை. மக்கள் தேர்ந்தெடுப்பதால் தான் வாய்ப்பு கிடைக்கிறது. எனவே, மக்களின் தேவையை பூர்த்தி செய்வதே, அரசின் முக்கிய கடமை. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)