பொருளாதார மந்த நிலையிலும் நாட்டில் வளர்ச்சி: சொல்கிறார் நிதியமைச்சர் சிதம்பரம்பொருளாதார மந்த நிலையிலும் நாட்டில் வளர்ச்சி: சொல்கிறார் நிதியமைச்சர் ... ... எண்ணூர் துறைமுகம் ரூ.151 கோடி திட்டம் எண்ணூர் துறைமுகம் ரூ.151 கோடி திட்டம் ...
தங்கம் பயன்பாட்டில் இந்தியாவை விஞ்சியது சீனா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2014
11:53

மும்பை: 'சென்ற, 2013ம் ஆண்டில், தங்கம் பயன்பாட்டில், முதன்முறையாக, இந்தியாவை விஞ்சி, சீனா சாதனை படைத்துள்ளது' என, உலக தங்க கவுன்சில் (டபிள்யூ.ஜி.சி.,) தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டு ஆண்டில், இந்தியாவில், தங்கத்திற்கான தேவை, 2012ம் ஆண்டை காட்டிலும், 13 சதவீதம் அதிகரித்து, 864 டன்னிலிருந்து, 975 டன்னாக உயர்ந்துள்ளது. அதேசமயம், சீனாவில், இதன் பயன்பாடு, 1,065.8 டன்னாக அதிகரித்துள்ளது. 2012ல், சீனாவில் ஒட்டு மொத்த தங்கத்திற்கான தேவை, 806.8 டன் என்ற அளவிலேயே இருந்தது. நாட்டின், நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் ஒரு பகுதியாக, தங்கம் மற்றும் ஆபரணங்கள் இறக்குமதிக்கு, சுங்க வரி அதிகரிப்பு மற்றும் தங்க பதக்கங்கள் மற்றும் தங்க காசுகள் இறக்குமதிக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையிலும், 2012ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, சென்ற ஆண்டில், உள்நாட்டில் தங்கம் பயன்பாடு, குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. சென்ற, 2013ல், இந்தியாவில், ஒட்டுமொத்த ஆபரணங்களுக்கான தேவை, 11 சதவீதம் அதிகரித்து, 612.7 டன் என்ற அளவில் உள்ளது. இதன் மதிப்பு, 1,61,750 கோடி ரூபாயாகும். இது, கடந்த 2012ம் ஆண்டில் முறையே, 552 டன் மற்றும் 1,58,359 கோடி ரூபாயாக இருந்தது.

இது குறித்து, உலக தங்க கவுன்சில் இந்திய நிர்வாக இயக்குனர், சோமசுந்தரம் கூறியதாவது: தங்கத்தில் முதலீடு மேற்கொள்வதை, சீனா ஊக்குவித்து வருகிறது. அதே வேளையில், இந்தியா இதன் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, நடப்பாண்டிலும், இதே நிலை தான் தொடரும். நடப்பாண்டில், சீனாவில், தங்கம் பயன்பாடு, 1,000 - 1,100 டன் என்ற அளவிலும், இந்தியாவில் இதன் பயன்பாடு, 900 - 1,000 டன் என்ற அளவிலும் இருக்கும். இவ்வாறு, சோமசுந்தரம் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)