தங்கம் பயன்பாட்டில் இந்தியாவை விஞ்சியது சீனாதங்கம் பயன்பாட்டில் இந்தியாவை விஞ்சியது சீனா ... தங்கம் விலை ரூ.56 குறைந்தது தங்கம் விலை ரூ.56 குறைந்தது ...
எண்ணூர் துறைமுகம் ரூ.151 கோடி திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2014
11:55

மும்பை: எண்ணூர் துறைமுகத்தில், 151 கோடி ரூபாயில், பன்முக சரக்கு பெட்டக முனையம் அமைக்கும் பணிக்கான ஆணை, இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என, இத்துறைமுக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.ஏ.பாஸ்கராச்சார் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: தற்போது, எண்ணூர் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன், 3 கோடி டன்னாக உள்ளது. இதை, அடுத்த சில ஆண்டுகளில், 6.5 கோடி டன்னாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, நடப்பு நிதியாண்டில், கூடுதலாக 3.5 கோடி டன் சரக்கை கையாள்வதற்கான, நான்கு விரிவாக்க திட்டங்களுக்கு அனுமதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், 1.60 கோடி டன் சரக்கு பெட்டக முனையம் அமைக்கும் பணி, அதானி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தவிர, 50 லட்சம் டன் திரவ இயற்கை எரிவாயு, 90 லட்சம் டன் நிலக்கரி ஆகியவற்றை கையாள்வதற்கான முனையங்கள் அமைக்கும் திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சரக்கு பெட்டக முனையம் ஒன்றில், கூடுதலாக, 20 லட்சம் டன் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதற்கான விரிவாக்கத் திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டிற்குள், ஒப்புதல் அளிக்கப்பட்ட விரிவாக்க திட்டங்கள் மூலம், அடுத்த சில ஆண்டுகளில், எண்ணூர் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன், 6.50 கோடி டன்னாக உயரும். விரிவாக்க திட்டங்களுக்கு, 500 கோடி ரூபாய் திரட்டும் நோக்கில், ஆண்டுக்கு, 9 சதவீத வட்டியில், கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, 1,000 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 95 கோடி ரூபாய் தான் திரட்ட முடிந்தது. தற்போது, வட்டி விகிதம் அதிகம் உள்ளதால், நிர்ணயிக்கப்பட்ட தொகையை திரட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இவவாறு பாஸ்கராச்சார் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)