பதிவு செய்த நாள்
19 பிப்2014
15:38
சேலம்: ''நடப்பு நிதியாண்டில், 300 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இது வரை 250 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது,'' என, கோ -ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர், சகாயம் தெரிவித்தார்.
மாணவர்களுக்கான, 'இலக்கு - லட்சியம்' குறித்த கருத்தரங்கு, சேலத்தில் உள்ள, தனியார் அரங்கில் நடந்தது. கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர், சகாயம் பேசியதாவது: வேஷ்டி தினம்' கொண்டாடப்பட்ட பின், கோ -- ஆப்டெக்ஸில், கூடுதலாக, ஒரு லட்சம் வேஷ்டிகள் விற்பனையாகியுள்ளன. நடப்பு நிதியாண்டில், 300 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 250 கோடி ரூபாய்க்கு, விற்பனை நடந்துள்ளது. கடந்த, 14 ஆண்டுகளாக, நஷ்டத்தில் இயங்கிவந்த, கோ - ஆப்டெக்ஸ், கடந்த ஆண்டில், இரண்டு கோடி ரூபாயும், நடப்பு ஆண்டில், 15 கோடி ரூபாயும், லாபம் சம்பாதித்துள்ளது. அடுத்த ஆண்டில், 30 கோடி ரூபாய், லாபம் ஈட்ட, இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்காக, புதிதாக, டிசைன் மையம் அமைக்கப்பட்டு, 'சூப்பர் 1,000' என, 1,000 புதிய டிசைன்களை உருவாக்கியுள்ளோம்.
இதில், தமிழகத்தில், சரித்திர புகழ் பெற்ற சிற்பங்களையும், இடங்களையும் காட்சிப்படுத்தும், 'சரித்ரா' பட்டு புடவையும் ஒன்று. முகூர்த்த பட்டு சேலை விற்பனையில், 85 கோடி ரூபாய் வரை, விற்பனை செய்து வருகிறோம். அடுத்த ஆண்டில், இதில் மட்டும், 200 கோடி ரூபாய்க்கு விற்பனையை, உயர்த்த திட்டமிட்டுள்ளோம். வேஷ்டி தினம் போன்றே, தாவணி தினம் கொண்டாடவும், கல்லூரிகளுக்கு வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|