தங்கம் விலை ரூ.56 குறைந்ததுதங்கம் விலை ரூ.56 குறைந்தது ... இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.23 இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.23 ...
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை ரூ.250 கோடி: மேலாண் இயக்குனர் சகாயம் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2014
15:38

சேலம்: ''நடப்பு நிதியாண்டில், 300 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இது வரை 250 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது,'' என, கோ -ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர், சகாயம் தெரிவித்தார்.

மாணவர்களுக்கான, 'இலக்கு - லட்சியம்' குறித்த கருத்தரங்கு, சேலத்தில் உள்ள, தனியார் அரங்கில் நடந்தது. கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர், சகாயம் பேசியதாவது: வேஷ்டி தினம்' கொண்டாடப்பட்ட பின், கோ -- ஆப்டெக்ஸில், கூடுதலாக, ஒரு லட்சம் வேஷ்டிகள் விற்பனையாகியுள்ளன. நடப்பு நிதியாண்டில், 300 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 250 கோடி ரூபாய்க்கு, விற்பனை நடந்துள்ளது. கடந்த, 14 ஆண்டுகளாக, நஷ்டத்தில் இயங்கிவந்த, கோ - ஆப்டெக்ஸ், கடந்த ஆண்டில், இரண்டு கோடி ரூபாயும், நடப்பு ஆண்டில், 15 கோடி ரூபாயும், லாபம் சம்பாதித்துள்ளது. அடுத்த ஆண்டில், 30 கோடி ரூபாய், லாபம் ஈட்ட, இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்காக, புதிதாக, டிசைன் மையம் அமைக்கப்பட்டு, 'சூப்பர் 1,000' என, 1,000 புதிய டிசைன்களை உருவாக்கியுள்ளோம்.

இதில், தமிழகத்தில், சரித்திர புகழ் பெற்ற சிற்பங்களையும், இடங்களையும் காட்சிப்படுத்தும், 'சரித்ரா' பட்டு புடவையும் ஒன்று. முகூர்த்த பட்டு சேலை விற்பனையில், 85 கோடி ரூபாய் வரை, விற்பனை செய்து வருகிறோம். அடுத்த ஆண்டில், இதில் மட்டும், 200 கோடி ரூபாய்க்கு விற்பனையை, உயர்த்த திட்டமிட்டுள்ளோம். வேஷ்டி தினம் போன்றே, தாவணி தினம் கொண்டாடவும், கல்லூரிகளுக்கு வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)