தங்கம் விலை ரூ.40 உயர்வுதங்கம் விலை ரூ.40 உயர்வு ... இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் - ரூ.61.94 இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் - ரூ.61.94 ...
காஸ் சிலிண்டர் டீலர்கள் நாளை முதல் 'ஸ்டிரைக்': தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2014
12:41

மதுரை: 'காஸ் சிலிண்டர் டீலர்களின் பல கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக', காஸ் டீலர்கள் அறிவித்தனர். இதனால், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

மதுரையில் நேற்று, அகில இந்திய எல்.பி.ஜி., வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய எல்.பி.ஜி., வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சார்பில், தென்மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டமைப்பு துணைத் தலைவர் சுரேஷ்குமார் கூறியதாவது: காஸ் சிலிண்டர்களில் வீட்டு உபயோக மானிய விலை சிலிண்டர், மானியம் இல்லாத சிலிண்டர், வர்த்தக சிலிண்டர் என விலைகளில் உள்ள வேறுபாடுகள் தான் எல்.பி.ஜி., வியாபாரத்தில் உள்ள அனைத்து முரண்பாடுகளுக்கும் காரணமாக உள்ளது. இதனால், ஒற்றை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். எண்ணெய் நிறுவனங்களில் இருந்து லாரிகளில் வெளிவரும் காஸ் சிலிண்டர்களில், திருட முடியாத வகையில் 'சீல்' பயன்படுத்த வேண்டும். மார்க்கெட்டுகளில் 2 முதல் 5 கிலோ சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிலிண்டர்களுக்கு காஸ் நிரப்பும் உரிமை யாருக்கும் இல்லாத நிலையில், இதன் பயன்பாடு அனைத்து இடங்களிலும் உள்ளது. திருட்டு கும்பலால் இந்த முறைகேடுகள் தொடர்ந்து வருகிறது.

எம்.டி.ஜி., 2014 வழிகாட்டுதல்களிலிருந்து, டீலர்களின் உரிமையை ரத்து செய்யும் பிரிவை அகற்ற வேண்டும். புதிய டீலர்கள் என்ற அறிவிப்புகள் வாடிக்கையாளர்கள் சேவையை எதிர்மறையாக பாதிக்கும். எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இது போன்ற பல கோரிக்கைகளுக்காக, அகில இந்திய அளவில் நாளை முதல் காஸ் டீலர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில், தொடர்ந்து போராட்டம் நடக்கும். மதுரையில் 28 டீலர்கள் உட்பட தென்மாவட்ட அளவில் 200 டீலர்கள், இப்போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர், என்றார். பாரத் காஸ் ஏரியா செயலர் ரவீந்திரன், எச்.பி., காஸ் நாகராஜன் உடனிருந்தனர். 'ஸ்டிரைக்' அறிவிப்பால், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)