பதிவு செய்த நாள்
27 பிப்2014
12:53
பதினெட்டு முதல் 25 வயது வரை இருக்கும் வாலிபர்கள், ஸ்டைலான ஆடை, சிறந்த செயல் திறனும், சீறிப் பாயத் தேவையான பிக்அப்பும், சடாரென நிறுத்தம் வல்லமையுள்ள, டிஸ்க் பிரேக்கும் கொண்ட, 125 சிசிக்கு மேற்பட்ட திறன் கொண்ட பைக்கில் அமர்ந்து, போக்குவரத்து நெரிசலிலும் சர்சர் என்று, வளைந்து நெளிந்து வேகமாய், சக பயணிகளை பயமுறுத்தி செல்வதை, அடிக்கடி நகரச் சாலைகளில் பார்க்க முடிகிறது. இது ஆரோக்கியமற்ற செயல் என்பதும், இம்மாதிரி பைக்கை ஓட்டிச் செல்வதால், அவர்களுக்கு ஆபத்து என்பதுடன், சக பயணிகளை, இது எப்படி பாதிக்கிறது என்பதையும் இவ்விளைஞர்கள் நினைத்து பார்ப்பதில்லை.
என்னால் சிறப்பாக ஓட்ட முடியும், அத்துடன் எப்படிப்பட்ட வேகத்திலும், என் பைக் என் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்ற குருட்டு தைரியத்தில், தங்கள் சாகத்தை இவர்கள் நெரிசலான சாலையில் காட்டுகின்றனர். சாலையில் வயதான பெரியவர்கள் நிதானமாக செல்வர். பெண்கள் பலர் மிதமான வேகத்தில் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகளுடன் செல்வர். புதிதாய் ஓட்டப் பழகியவர்கள் தயக்கத்துடன் சென்று கொண்டிருப்பர். இப்படி பல வேலைகளாய், பலவித கவலைகளுடன் வண்டி ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், திடீரென்று, இம்மாதிரி அதித வேகத்தில், ஒரு வண்டி நடந்து செல்லும்போது, பலரும் நிலை குலைந்தே போவர். பதற்றத்துடன் வண்டியை, ஒரு புறமாய் திருப்புவதோ, வண்டியை ஆட்டுவதோ பேலன்ஸ் தவறி கீழே விழுவதோ இம்மாதிரி சமயங்களில் நடக்கின்றன. இச்செயல் நான்கு சக்கர ஓட்டுனர்களையும் கலவரப்படுத்தி விடுகிறது.
போக்குவரத்து காவல் துறையினர், இம்மாதிரி வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அபராதம் விதித்து கட்டுப்படுத்தும்படி இல்லாமல், இம்மாதிரி வாகனம் ஓட்டும் இளைஞர்களும் சமூக பொறுப்போடு, இச்செயலை தவிர்ப்பது நல்லது. வாகன நிறுவனங்களின் ரேசர் ராலிகளில் கலந்து கொண்டு, தங்கள் வீரத்தையும், தங்களின் பைக்கின் செயல்திறனையும் இவர்கள் சோதித்துக் கொள்ளலாம். சாமானியர் பயணிக்கும் சாலையில், விவேகத்துடன் செயல்படுவதை வீரமாகும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|