பதிவு செய்த நாள்
27 பிப்2014
14:23
பெங்களூரு : இந்தியாவில் உள்ள முன்னணி ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் தனது ஊழியர்களின் சம்பளத்தை 5 முதல் 7 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் ஜூனியர் பணியாளர், இன்ஜினீயரிங் அல்லாத பணியாளர்கள், சீனியர் பிராஜக்ட் மேனேஜர் உள்ளிட்ட பலர் சம்பள உயர்வு பெற இருக்கின்றனர். அதாவது இரண்டாம் நிலை தொழிலாளர்களில் இருந்து ஆறாம் நிலை உள்ள தொழிலாளர்கள் வரை இந்த சம்பள உயர்வு பெற உள்ளனர். இந்த சம்பள உயர்வு வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
2014ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளியான உடன், இந்த சம்பள உயர்வு நடைமுறைப்படுத்தப்படும். இதற்கு கடந்த 2013ம் ஆண்டு ஜூலையில் சம்பள் உயர்த்தப்பட்டது. அதன்பின் அடுத்த 9 மாதங்களில் இந்த சம்பள உயர்வு அளிக்கப்பட இருக்கிறது என இந்நிறுவனத்தின் செய்தியாளர்கள் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|