தங்கம் விலை ரூ.120 அதிகரிப்புதங்கம் விலை ரூ.120 அதிகரிப்பு ... மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ...
நாட்டின் முதல் தபால் துறை ஏ.டி.எம்., சென்னை தி.நகரில் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2014
12:57

சென்னை: நாட்டின் முதல், தபால் துறை ஏ.டி.எம்., மையத்தை, சென்னை, தி.நகர் தலைமை அஞ்சலகத்தில், மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் நேற்று துவக்கி வைத்தார்.

விழாவில், அவர் பேசியதாவது: இன்று, ஒரு புதிய முயற்சியில் தபால் துறை ஈடுபட்டுள்ளது. தபால் நிலையங்கள் தேவையா; யாராவது தபால் எழுதுவரா; யாராவது தபாலை படிப்பரா என, கேள்விகள் கேட்கப்படும் இந்த காலத்தில், புதிய யுக்திகளைப் புகுத்தி, தபால் துறை எழுச்சி பெற்று வருகிறது. குறிப்பாக கடிதப் போக்குவரத்து குறைந்தாலும், வேறு வழிகளில், தபால் துறை சிறப்பு பெற்று வருகிறது. கொரியர், பார்சல் சேவைகளை இன்னும் சிறிது காலத்திற்கு, தபால் துறை மூலம் செய்வதே சிறப்பாக இருக்கும் என்று பலரும் கருதுகின்றனர்.

மத்திய அரசின், இடைக்கால பட்ஜெட்டில், நாடு முழுவதும் உள்ள, 1.55 லட்சம் தபால் நிலையங்களில், தகவல் தொழில்நுட்பத்தைப் புகுத்த, 4,909 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தபால் துறையில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, இந்த ஏ.டி.எம்., மையம் பயனுள்ளதாக இருக்கும். ஆறு மாதத்திற்கு, சோதனை முறையில், இந்த ஏ.டி.எம்., செயல்படும். பின் எந்த வங்கி கணக்கிலும் இக்கார்டை பயன்படுத்தி, பணம் எடுக்கலாம். இதை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டியது, தபால் துறை மற்றும் வாடிக்கையாளர்களின் கடமை. இவ்வாறு, சிதம்பரம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தபால் துறை செயலர், பத்மினி கோபிநாத், தலைமை தபால் துறைத் தலைவர், மூர்த்தி, முதன்மை அஞ்சல் துறை தலைவர், மெர்வின் அலெக்சாண்டர் மற்றும் தபால் துறை உயரதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

11 பேருக்கு ஏ.டி.எம்., கார்டு : தி.நகர் ஏ.டி.எம்., மையத்திற்கு பிறகு, சென்னையில், கிரீம்ஸ் சாலை, மயிலாப்பூர் மற்றும் அண்ணா சாலை அஞ்சலகங்களில், ஏ.டி.எம்., வசதி செய்யப்பட உள்ளது.தி.நகர் ஏ.டி.எம்., மையத்தைப் பயன்படுத்த, 11 பேருக்கு, ஏ.டி.எம்., கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)