பதிவு செய்த நாள்
28 பிப்2014
17:16
மும்பை : வாரத்தின் கடைசிநாளில் இந்திய பங்குசந்தைகள் உயர்ந்தன. இதனால் கடந்த ஐந்து வாரங்களுக்கு பிறகு சென்செக்ஸ் மீண்டும் 21 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் முன்னேற்றம் மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் உயர்வால், பங்குவர்த்தகர்கள் அதிகளவு பங்குகளை வாங்கினர். இதனால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 133.13 புள்ளிகள் உயர்ந்து 21,120.12 எனும் அளவில் முடிந்தது. இதேப்போல் தேசிய பங்குசந்தையான நிப்டி 38.15 புள்ளிகள் உயர்ந்து 6,276.95-ஆக முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 18 நிறுவன பங்குகள் விலை உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக டிசிஎஸ்., டாடா மோட்டார்ஸ், சன்பார்மா, பெல் உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. மாருதி சுசூகி உள்ளிட்ட 12 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|