பதிவு செய்த நாள்
01 மார்2014
11:32
புதுடில்லி: நடப்பு, 2013 - 14ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்., டிச.,), நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 4.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது, இரண்டாவது காலாண்டில், 4.8 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில், வேளாண் துறை வளர்ச்சி, 4.6 சதவீதத்திலிருந்து, 3.6 சதவீதமாக குறைந்துள்ளது. தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, ஒரு சதவீதத்திலிருந்து, மைனஸ் 1.9 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது. இவை தவிர, சுரங்க துறையின் வளர்ச்சி, மைனஸ் 0.4 சதவீதத்திலிருந்து, மைனஸ், 0.3 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது. மின் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 7.7 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக சரிவடைந்துள்ளது. பார்லிமென்ட் தேர்தலுக்கு பின், உள்நாட்டில் தேவைப்பாடு அதிகரிக்கும் என, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வரும் 2014 15ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும் என, மத்திய அரசு, மதிப்பீடு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|