பதிவு செய்த நாள்
01 மார்2014
12:10
சென்னை: ரயில் புறப்பட்டு, இரண்டு மணி நேரத்திற்கு பின், டிக்கெட்டை ரத்து செய்தால், கட்டணம் திரும்ப பெற முடியாது. இக்கட்டுப்பாடு, இன்று முதல் அமலாகிறது. ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள், 48 மணி நேரத்திற்கு முன், டிக்கெட்டை ரத்து செய்தால், குறைந்தபட்சம், 60 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு, மீதித் தொகை திரும்ப வழங்கப்பட்டது. காத்திருப்போர் பட்டியலில் முன்பதிவு செய்து, 48 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்தால், 30 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. ரயில் புறப்படுவதற்கு, ஆறு மணி நேரம் முன், முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்தால், 25 சதவீத தொகை பிடித்தம் செய்யப்பட்டு, மீதி தொகை வழங்கப்பட்டது. ஆறு மணி நேரத்திற்கு பின், டிக்கெட்டை ரத்து செய்தால், 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
ரயில் புறப்பட்ட, இரண்டு மணி நேரத்திற்கு பிறகும் கூட, பயணம் செய்யாத முன்பதிவு டிக்கெட்டிற்கு திரும்ப பணம் பெறும் வசதி இருந்தது. இன்று முதல், இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்படுகிறது.இனிமேல், முன்பதிவு செய்து விட்டு, பயணம் செய்யாவிட்டால், கட்டணம் திரும்ப கிடைக்காது. தனியாகவோ, குழுவாகவோ டிக்கெட் எடுப்பவர்களில் யாராவது ஒருவர், பயணம் செய்யாவிட்டால், அவர்களின் கட்டணம் திரும்ப கிடைக்காது. ஆர்.ஏ.சி., டிக்கெட்கள்; "ஏசி' பெட்டிக்கு பதில், சாதாரண பெட்டிக்கு மாற்றுதல்; ரயில்கள் ரத்து மற்றும் இருக்கை ஒதுக்காதது ஆகிய காரணங்களால், டிக்கெட் ரத்து செய்யப்படும் போது, கட்டணம் திரும்ப கிடைக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|