பதிவு செய்த நாள்
07 மார்2014
17:16
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக, வரலாறு காணாத அளவுக்கு ஏற்றம் பெற்றன. நடப்பாண்டில் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.2 பில்லியன் டாலராக குறைந்தது. இதனால் நேற்று முதலே இந்திய பங்குசந்தகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. நேற்று சென்செக்ஸ் 21,513 புள்ளிகளாக உயர்ந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்து புதிய வரலாறு படைத்தது. கிட்டத்தட்ட சென்செக்ஸ் 22 ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. அதேப்போல் தேசிய பங்குசந்தையான நிப்டியும் 6,526.65 புள்ளிகளாக உயர்ந்தது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 973 புள்ளிகள் உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒருநாள் மட்டும் சுமார் 85 ஆயிரம் கோடிக்கு பங்குவர்த்தகம் நடைபெற்று முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.
அந்நிய முதலீடு அதிகரித்தது, ரூபாயின் மதிப்பு 61-க்கு கீழ் சென்றது போன்ற காரணங்களால் ஐடி, மருத்துவம் சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 405.92 புள்ளிகள் உயர்ந்து 21,919.79-ஆக முடிந்தது. வர்த்தகநேரத்தின் போது சென்செக்ஸ் அதிகபட்சமாக 21,960.89 வரை சென்றது. அதேப்போல் தேசிய பங்குசந்தையான நிப்டியும் 125.50 புள்ளிகள் உயர்ந்து 6,526.65-ஆக முடிந்தது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 22 நிறுவன பங்குகள் விலை நல்ல ஏற்றம் கண்டன. குறிப்பாக பெல், ஐசிஐசிஐ., ஆக்சிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவன பங்குகள் அதிக லாபம் பெற்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|