பொருளாதார வளர்ச்சிநன்கு உள்ளது: சிதம்பரம்பொருளாதார வளர்ச்சிநன்கு உள்ளது: சிதம்பரம் ... தங்கம் விலையில் மாற்றமில்லை தங்கம் விலையில் மாற்றமில்லை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின்புதிய வங்கி உரிமம் குறித்து அறிவிக்கப்படும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2014
23:49

புதுடில்லி:தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின், புதிய வங்கி உரிமம் வழங்குவது குறித்து அறிவிக்கப்படும்,’’ என, ரிசர்வ் வங்கியின் கவர்னர், ரகுராம் ராஜன் தெரிவித்தார்.மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தலைமையில், நேற்று, ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழு கூட்டம், டில்லியில் நடைபெற்றது.
27 நிறுவனங்கள்:இக்கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களிடம் ரகுராம் ராஜன் கூறியதாவது:மத்திய அரசின் ஒப்புதலை யடுத்து, ரிசர்வ் வங்கி, புதிய வங்கி துவங்குவதற்கான விண்ணப்பங்களை பெற்றது. இது தொடர்பாக, இந்திய அஞ்சல் துறை, ஐ.எப்.சி.ஐ., அனில் அம்பானி குழுமம், ஆதித்ய பிர்லா குழுமம் உள்ளிட்ட, 27 நிறுவனங்கள், புதிய வங்கி துவங்குவதற்கு உரிமம் அளிக்க விண்ணப்பித்தன. இந்நிலையில், டாட்டா சன்ஸ் மற்றும் வேல்யூ
இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள், விண்ணப்பங்களை திரும்பப்பெற்றன.புதிய வங்கி துவங்குவதற்கான உரிமம் வேண்டி வந்த விண்ணப்பங்களை, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், பிமல் ஜலான் தலைமையிலான குழு ஆய்வு செய்து, ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்துள்ளது.
அடுத்த சில வாரங்களில்...புதிய வங்கி துவங்குவதற்கான அனுமதி குறித்த அறிவிப்பு, இம்மாதம் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பார்லிமென்ட் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடைமுறை விதி அமலுக்கு வந்துள்ளது.எனவே, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே, இதுகுறித்த அறிவிப்பை வெளியிடமுடியும். தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கும்பட்சத்தில், அடுத்த சில வாரங்களில், இதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.இவ்வாறு, ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)