பொருளாதார வளர்ச்சிநன்கு உள்ளது: சிதம்பரம்பொருளாதார வளர்ச்சிநன்கு உள்ளது: சிதம்பரம் ... தங்கம் விலையில் மாற்றமில்லை தங்கம் விலையில் மாற்றமில்லை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அன்னிய நிதி நிறுவனங்கள்இரு வாரங்களில் ரூ.7,000 கோடி முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2014
23:56

இந்திய பங்குச் சந்தை களில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.இந்திய பொருளாதாரம் வளர்ச்சி காண்பதற்கான சூழல் மற்றும் லோக்சபா தேர்தலுக்கு பின், மத்தியில் புதிய ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவையே இதற்கு காரணம் என, கூறப்படுகிறது.
110 கோடி டாலர்:பிப்ரவரி 12ம் தேதி முதல், தொடர்ந்து 15 வர்த்தக தினங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள், 110 கோடி டாலர் (7,000 கோடி ரூபாய்) அளவிற்கு பங்குகளில் முதலீடு செய்துள்ளன.நடப்பாண்டு, ஜனவரி மற்றும் பிப்ரவரி துவக்கத்தில்,இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து, அன்னிய நிதி நிறுவனங்கள், அதிக அளவில் முதலீடுகளை திரும்பப் பெற்றன.இந்நிலையில், பிப்ரவரி மத்தியில் இருந்து, அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இத்துடன், கடன் பத்திரங்களிலும் அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன.நடப்பாண்டில் இதுவரை, 500 கோடி டாலர் அளவிற்கு, கடன் பத்திரங்களில் அன்னிய முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதே காலத்தில், பங்குகளில், 82 கோடி டாலர் (4,850 கோடி ரூபாய்) அளவிற்கு, அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
ஆய்வாளர்கள் கருத்து:கடந்த, 2013ம் ஆண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிதிச் சந்தைகளில், 2,000 கோடி டாலர் (1.12 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்திருந்தன.வரும் மே மாதம் வெளியாக உள்ள தேர்தல் முடிவுகளை பொறுத்தே, அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு கொள்கை அமையும் என, ஆய்வாளர்கள்
தெரிவித்தனர்.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)