பதிவு செய்த நாள்
08 மார்2014
00:01
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று, மிகவும் சிறப்பாக இருந்தது.கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது மற்றும் மூன்று மாதங்களுக்கு பின், ரூபாய் மதிப்பு சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது.
ரூ.1,273 கோடி:இது போன்ற காரணங்களால், பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த, 15 தினங்களில் மட்டும், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், நிகர அளவில், 100 கோடி டாலருக்கும் அதிகமாக, முதலீடு செய்துள்ளன. நேற்று முன்தினம் மட்டும், மேற்கண்ட நிறுவனங்கள், 1,273 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பங்குகளை வாங்கியுள்ளன.இந்நிலையில், நேற்று, சென்செக்ஸ்’ 1.89 சதவீதம் அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியது.அதேசமயம், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஏற்ற, இறக்கமாக இருந்தது. நேற்றைய வர்த்தகத்தில், வங்கி, பொறியியல், ரியல் எஸ்டேட், எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.
‘நிப்டி’ 125 புள்ளிகள் உயர்வு
இருப்பினும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, தேவை குறைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 405.92 புள்ளிகள் அதிகரித்து, 21,919.79 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பீ.எச்.இ.எல்., ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட, 22 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், டாக்டர் ரெட்டீஸ், விப்ரோ, என்.டி.பி.சி., உள்ளிட்ட, 8 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 125.50 புள்ளிகள் உயர்ந்து, 6,526.65 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|