பதிவு செய்த நாள்
11 மார்2014
00:23
திம்பு:பூடானில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்காக, 850 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க, இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.தலைநகர் திம்புவில், பூடான் அரசின், சிறிய மேம்பாட்டு திட்டக் குழு (எஸ்.டீ.பி.,) உறுப்பினர்களுடன், இந்திய துாதரக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், இம்முடிவு எடுக்கப்பட்டது.முதன் முறையாக நடைபெற்ற இக்கூட்டத் தில், கடந்த 10வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, எஸ்.டீ.பி., திருப்தி தெரிவித்தது. மேலும், 11வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், 180 கோடி ரூபாய் மதிப்பிலான, 59 திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில், 39 திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளும், 20 திட்டங்களை மத்திய முகமை அமைப்புகளும் மேற்கொள்ளும்.இக்குழுவின் இரண்டாவது கூட்டம் வரும், செப்டம்பர் மாதம் நடைபெறும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|