பதிவு செய்த நாள்
11 மார்2014
00:24
புதுடில்லி:வங்கிகள் திரட்டிய டெபாசிட், சென்ற பிப்ரவரியில், 16 சதவீதம் அதிகரித்து, 76,05,171 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, சென்ற 2013ம் ஆண்டு, பிப்ரவரியில், 65,65,137 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலத்தில், வங்கிகள் வழங்கிய கடன், 14 சதவீத அளவிற்கே அதிகரித்து, 51,27,264 கோடியில் இருந்து, 58,61,736 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.ஆக, மதிப்பீட்டு காலத்தில், வங்கிகள் வழங்கிய கடனை விட, திரட்டிய டெபாசிட், 2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு, 2013 – 14ம் நிதியாண்டில், வங்கிகளின் கடன் வளர்ச்சி, 15 சதவீதமாகவும், டெபாசிட் வளர்ச்சி, 14 சதவீதமாகவும் இருக்கும் என, ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.மதிப்பீட்டு காலத்தில், வங்கிகளின் குறித்த கால டெபாசிட், 16.47 சதவீதம் அதிகரித்து, 59,34,640 கோடியில் இருந்து, 69,12,598 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், டிமாண்ட் டெபாசிட், 10 சதவீதம் அதிகரித்து, 6,30,497 கோடியில் இருந்து, 6,92,574 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|