பதிவு செய்த நாள்
11 மார்2014
17:04
மும்பை : கடந்த ஐந்து நாட்களாக ஏற்றம் மட்டுமே கண்டு வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று(மார்ச் 11ம் தேதி) சரிவை சந்தித்துள்ளன. கடந்த இருதினங்களாக சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை தாண்டி உச்சத்தை தொட்ட நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான நாட்டின் ஏற்றுமதி இன்று வெளியானது. இதில் ஏற்றுமதி 3.67 சதவீதம் சரிந்து 25.68 பில்லியன் டாலராக குறைந்தது. இதனையடுத்து மதியத்திற்கு மேல் இந்திய பங்குசந்தைகள் சரிவை சந்தித்தன. மேலும் முதலீட்டாளர்களும் கடந்த ஐந்து தினங்களாக காணப்பட்ட ஏற்றத்தை கருத்தில் கொண்டு அதிகளவு பங்குகளை விற்க தொடங்கியதால் இறுதியில் பங்குசந்தைகள் சரிவுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 108 புள்ளிகள் சரிந்து 21,826.42-ஆக முடிந்தது. தேசிய பங்குசந்தையான நிப்டி 25.35 புள்ளிகள் சரிந்து 6,511.90-ஆக முடிந்தது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 18 நிறுவன பங்குகள் விலை சரிந்து முடிந்தன. குறிப்பாக டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி., மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி சுசூகி, சன் பார்மா, கோல் இந்தியா, பஜாஜ் இந்தியா, ஐடிசி., டாக்டர் ரெட்டி உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன. அதேசமயம் டாடா பவர், ரிலையன்ஸ் இன்பரா., ரிலையன்ஸ் பவர் உள்ளிட்ட சில பங்குகள் லாபம் பெற்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|