பதிவு செய்த நாள்
12 மார்2014
15:44
மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் உட்பட பல நிறுவனங்கள், மக்கள் அனைவரும் வாங்கும் விலையில், ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்கத் தொடங்கிவிட்டன. ஸ்மார்ட் போன்களுக்கு இந்தியாவில் திடீரென தேவை அதிகரித்துள்ளது. மக்கள் இதனை அதிகம் நாடத் தொடங்கி உள்ளனர். சென்ற ஆண்டில் 4 கோடியே 40 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விறபனையாகியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டில், இது 1 கோடியே 62 லட்சமாக இருந்தது. சென்ற ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் மட்டும், ஸ்மார்ட் போன் விற்பனை 181 சதவீதம் அதிகரித்தது. இதற்குக் காரணம் லாவா மற்றும் இண்டெக்ஸ் நிறுவனங்கள், ஸ்மார்ட் போன் பிரிவில் அதிக எண்ணிக்கையில் போன்களை அறிமுகப்படுத்தியதே என இது குறித்து கண்காணித்து வரும் ஐ.டி.சி. அமைப்பு அறிவித்துள்ளது.
குறைவான விலையில் அதிக எண்ணிக்கையில், ஸ்மார்ட் போன் மாடல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி, பன்னாட்டு நிறுவனங்களும் இந்த நிலையை உணர்ந்து கொண்டு, அனைத்து நிலை மக்களும் வாங்கும் வகையில் பல்வேறு நிலை விலைகளில் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறைந்த விலையில், அதிக வசதிகளைக் கொண்டுள்ள ஸ்மார்ட் போன்களை வழங்குவதைத் தங்களின் இலக்காக இந்நிறுவனங்கள் கொண்டுள்ளன. இதனால், மொபைல் போன் ஒன்றின் சராசரி விலை ரூ.8,250 லிருந்து ரூ.7,000 ஆகக் குறைந்தது. இணையத்தினை, மொபைல் போன் வழி தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இது வரும் ஜூனில், 18 கோடியே 50 லட்சமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்ற டிசம்பரில் இது 13 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|