தங்கம் விலை ரூ.56 உயர்ந்ததுதங்கம் விலை ரூ.56 உயர்ந்தது ... ரூபாயின் மதிப்பு ரூ.59-ஐ எட்டும் - பார்க்லேஸ் ரூபாயின் மதிப்பு ரூ.59-ஐ எட்டும் - பார்க்லேஸ் ...
ஸ்மார்ட் போன் விலை இடைவெளி குறைகிறது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2014
15:44

மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் உட்பட பல நிறுவனங்கள், மக்கள் அனைவரும் வாங்கும் விலையில், ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்கத் தொடங்கிவிட்டன. ஸ்மார்ட் போன்களுக்கு இந்தியாவில் திடீரென தேவை அதிகரித்துள்ளது. மக்கள் இதனை அதிகம் நாடத் தொடங்கி உள்ளனர். சென்ற ஆண்டில் 4 கோடியே 40 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விறபனையாகியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டில், இது 1 கோடியே 62 லட்சமாக இருந்தது. சென்ற ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் மட்டும், ஸ்மார்ட் போன் விற்பனை 181 சதவீதம் அதிகரித்தது. இதற்குக் காரணம் லாவா மற்றும் இண்டெக்ஸ் நிறுவனங்கள், ஸ்மார்ட் போன் பிரிவில் அதிக எண்ணிக்கையில் போன்களை அறிமுகப்படுத்தியதே என இது குறித்து கண்காணித்து வரும் ஐ.டி.சி. அமைப்பு அறிவித்துள்ளது.

குறைவான விலையில் அதிக எண்ணிக்கையில், ஸ்மார்ட் போன் மாடல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி, பன்னாட்டு நிறுவனங்களும் இந்த நிலையை உணர்ந்து கொண்டு, அனைத்து நிலை மக்களும் வாங்கும் வகையில் பல்வேறு நிலை விலைகளில் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறைந்த விலையில், அதிக வசதிகளைக் கொண்டுள்ள ஸ்மார்ட் போன்களை வழங்குவதைத் தங்களின் இலக்காக இந்நிறுவனங்கள் கொண்டுள்ளன. இதனால், மொபைல் போன் ஒன்றின் சராசரி விலை ரூ.8,250 லிருந்து ரூ.7,000 ஆகக் குறைந்தது. இணையத்தினை, மொபைல் போன் வழி தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இது வரும் ஜூனில், 18 கோடியே 50 லட்சமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்ற டிசம்பரில் இது 13 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)