பிப்ரவரியில் பணவீக்கம் 4.68 சதவீதமாக குறைந்ததுபிப்ரவரியில் பணவீக்கம் 4.68 சதவீதமாக குறைந்தது ... தங்கத்தில் மாற்றமில்லை - வெள்ளிவிலை உயர்வு தங்கத்தில் மாற்றமில்லை - வெள்ளிவிலை உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பணவீக்கத்தால் பங்குசந்தைகள் மீண்டன - சென்செக்ஸ் 35 புள்ளிகள் உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2014
16:57

மும்பை : பணவீக்கம் குறைந்ததால் வாரத்தின் கடைசிநாளில் சரிவில் இருந்த இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்தில் முடிந்தன. உக்ரைனில் நிலவும் பதட்டமான சூழலால் அமெரிக்கா உள்ளிட்ட உலகளவில் பங்குசந்தைகள் சரிந்தது, மேலும் சீனாவின் வளர்‌ச்சி குறைந்ததால், ஆசியாவின் இதர பங்குசந்தைகளும் சரிந்து இருந்தன. இதனால், இந்திய பங்குசந்தைகளும் இன்று சரிவுடனேயே இருந்தன. இந்நிலையில் மதியம் பிப்ரவரி மாதத்திற்கான பணவீக்கம் வெளியானது. அதில் கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 4.68 சதவீதமாக குறைந்தது. இதனால் பங்குசந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக சரிவில் இருந்து மீண்டு இறுதியில் ஏற்றத்தில் முடிந்தன.

வர்த்தகநேர முடிவில், மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 35.19 புள்ளிகள் உயர்ந்து 21,809.80-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 11.10 புள்ளிகள் உயர்ந்து 6,504.20-ஆகவும் முடிந்தன. சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில், 15 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், 14 நிறுவன பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன. டாடா பவர் பங்குவிலை மாற்றமின்றி முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் டாக்டர் ரெட்டி லேப், சன் பார்மா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோ கார்ப், இன்போசிஸ், லார்சன் அண்ட் டர்போ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பெல், சிப்லா நிறுவன பங்குகள் லாபம் பெற்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)