பதிவு செய்த நாள்
18 மார்2014
10:15
மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று(மார்ச் 18ம் தேதி) வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை தாண்டியும், நிப்டி 6559 புள்ளிகளிலும் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 137.66 புள்ளிகள் உயர்ந்து 21,947.46-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 47.35 புள்ளிகள் உயர்ந்து 6,551.55-ஆக இருந்தது.
இருப்பினும், காலை 10 மணிக்கு மேல் வர்த்தகம் இன்னும் சூடு பிடித்தது. 10.05 மணியளவில், சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை தாண்டியும், நிப்டி இதுவரை இல்லாத அளவுக்கு 6,559 புள்ளிகலும் வர்த்தகமானது.
கடந்த வெள்ளியன்று வெளியான பணவீக்கத்தில், 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் குறைந்தது, அமெரிக்கா மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் உயர்வு, அதிகளவு அந்நிய முதலீடுகள் அதிகரித்து வருவது, முக்கிய நிறுவன பங்குகள் உயர்ந்து வருவது, குறிப்பாக மாருதி சுசூகியின் பங்குகள் 9 சதவீதம் உயர்ந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகளில் அதிரடி உயர்வு காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|