பதிவு செய்த நாள்
18 மார்2014
17:09
மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று(மார்ச் 18ம் தேதி) மேலும் ஒரு புதிய உச்சத்தை தொட்டன. சென்செக்ஸ் 22,040.72-ம், நிப்டி 6,574.75 புள்ளிகளையும் தொட்டன. அமெரிக்கா, ஆசியா உள்ளிட்ட உலகளவில் பங்குசந்தைகள் உயர்ந்து இருந்தது, அந்நிய முதலீடுகள் அதிகரித்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் உச்சத்தை தொட்டன. இருப்பினும் இந்திய பங்குசந்தைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததால் லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் வர்த்தகநேர முடிவில் சிறிய ஏற்றத்துடன் இந்திய பங்குசந்தைகள் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 22.81 புள்ளிகள் உயர்ந்து 21,832.61-ஆக முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 22,040.72 புள்ளிகள் சென்றது. இதேப்போல் தேசிய பங்குசந்தையான நிப்டியும் இதுவரை இல்லாத அளவுக்கு 6,574.95 புள்ளிகள் உயர்ந்தது. முடிவில் 6,516.65-ஆக முடிந்தது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 17 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், 13 நிறுவன பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன. குறிப்பாக மாருதி சுசூகி நிறுவன பங்குகள் 8 சதவீதம் உயர்ந்தன. இதுதவிர்த்து பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, டாக்டர் ரெட்டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி., எஸ்பிஐ., ஓஎன்ஜிசி., போன்ற பங்குகளும் நல்ல லாபம் கண்டன. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பங்குகள் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|