பதிவு செய்த நாள்
20 மார்2014
14:18
கார் ஓட்டுனர்களின் மிகப்பெரிய ஆசை, எப்படியாவது ஆடி கார் வாங்கி விட வேண்டும் என்பதுதான். கார் வாங்க முடியாவிட்டாலும், வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை ஓட்டியாவது பார்த்து விட வேண்டும் என்ற அந்த ஆசை, சமீபத்தில் கோவையில்உள்ள கோவைப்புதூர் பகுதியில் நிறைவேறியது. ஆன் ரோடில் மட்டுமே கார்களை இயக்க முடியும் என்று நினைத்திருந்தவர்களுக்கு, ஆப் ரோடிலும் இயக்க முடியும் என்று நிருபித்தது அந்த நிகழ்வு. கியூ 3, கியூ 5, கியூ 7 வரிசை கொண்ட ஏழு கார்கள், கோவைப்புதூரில் உள்ள கால்ப் கிளப் மைதானத்தில் இயக்கப்பட்டன.
மண் சாலையில் ஆங்காங்கே தோண்டப்பட்டிருந்த பள்ளத்துக்குள் லாவகமாய் இறங்கின ஆடி கார்கள். கார்களை இயக்க, 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேடு, பள்ளங்களுக்குள் கார்களை ஓட்டியவர்கள் முகத்தில் அப்படியொரு இன்ப அதிர்ச்சி. பள்ளத்தில் கார் இறங்கும் போது, கவிழ்ந்து விடுமோ என்ற அதிர்ச்சி ரேகையையும் பலரது முகத்தில் காணமுடிந்தது. இறுதியில் 'ஆகா...இதுவன்றோ கார்' என்ற பிரமிப்பு ரேகைகள் அவர்களின் முகத்தில் காணப்பட்டன. காரை இயக்கிப் பார்த்த ஒருவர் கூறுகையில், "ஆடி காரை, எப்படியும் வாங்கி விட வேண்டும் என்ற ஆசை இதுவரை நிறைவேறவில்லை. ஆனால் ஆப் ரோடில் ஓட்டிப்பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ' என்றார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|