பதிவு செய்த நாள்
20 மார்2014
16:38
மும்பை : கடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு சென்செக்ஸ் 93 புள்ளிகள் சரிந்து உள்ளது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த போவதாக வந்த தகவலால் உலகம் முழுக்க பங்குசந்தைகளில் சுணக்கம் காணப்படுகிறது. குறிப்பாக ஆசிய பங்குசந்தைகளில் சரிவு காணப்படுகின்றன. மேலும் வங்கி, முதலீடு மற்றும் எரிசக்தி தொடர்பான பங்குகள் விலை சரிந்ததால் இந்திய பங்குசந்தைகள் நாள் முழுக்க இன்று(மார்ச் 20ம் தேதி) சரிவிலேயே முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 92.77 புள்ளிகள் சரிந்து 21,740.09-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 40.95 புள்ளிகள் சரிந்து 6,483.10-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில், 22 நிறுவன பங்குகள் விலை சரிவில் முடிந்தன. குறிப்பாக எச்டிஎப்சி., எல்அண்ட்டி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிந்து இருந்தன. டிசிஎஸ்., இன்போசிஸ் உள்ளிட்ட 8 நிறுவன பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|